Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவரும், வலதுசாரி சிந்தனையாளருமான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று அந்நாட்டு காவல்துறை சந்தேகித்துள்ளது.
சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உயர் ரக துப்பாக்கியை காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், சார்லி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர்தான், அங்கிருந்த ஒரு கட்டடத்தின் கூரையின் மேலிருந்து சார்லியை சுட்டுள்ளார் என்றும், பின்னர் தப்பியோடிய அவர் ஒரு கல்லூரி மாணவராக இருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : நேபாளத்தில் இடைக்கால அரசின் தலைவர் யார்? உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு அதிக வாய்ப்பு