Also Watch
Read this
By: Web Team

காங்கோ நாட்டில் சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கொமாண்டா நகரில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
மேலும், சர்சுக்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்த நிலையில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.