Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளியான ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு முதியோர்கள் வாகன விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு பென்சில்வேனியாவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கடந்த மாதம் 29ம் தேதி காரில் பயணம் மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் அவர்களின் வாகனம் சாலையில் ஒரு செங்குத்தான கரையின் அடிப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த மூத்த குடிமக்களான ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ் திவான் மற்றும் கீதா திவான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved