Also Watch
Read this
By: Web Team

ஸ்வீடனில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். ஸ்டாக்ஹோமிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓரேப்ரோ நகரில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துக்கொண்டு மக்கள் வெளியேறிய போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து கொண்டு ஓடியதால் பீதி ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தேடி வருவதாக கூறிய போலீசார் தாக்குதல் நடத்தியவர் குற்றவழக்கில் தொடர்புடையராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved