Also Watch
Read this
By: Web Team

தென் ஆப்பிரிக்க நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டோரியா நகருக்கு அருகில் உள்ள தனியார் மதுபான விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள், எதிர்பாராத விதமாக அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved