Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் தான் ஹமாஸ் அமைப்பினருக்கு கடைசி வாய்ப்பு என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டிரம்ப், மத்திய கிழக்கின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த, மிகவும் பணக்கார நாடுகள் மற்றும் அமெரிக்கா உடன் சேர்ந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
ஹமாஸ் மட்டும் கையெழுத்து போடாவிட்டால், முன்பு யாரும் கண்டிராத வகையில், அனைத்து நரக வேதனை ஹமாசுக்கு கிடைக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் அரசு நிதியுதவி தடை விண்வெளி நிறுவனமான நாசாவின் சேவை பாதிப்பு