Also Watch
Read this
By: Web Team

பிரான்சின் பாரிஸில், ஐரோப்பிய கிளப் கால்பந்தின் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வெற்றி கொண்டாட்டம் வன்முறையாக மாறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
போலீசார் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஐரோப்பிய கிளப் கால்பந்தின் இறுதிப் போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
இதில் பிஎஸ்ஜி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இதனை பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய ரசிகர்கள், கார்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 260 வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன நிலையில் இது தொடர்பாக 500 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved