Also Watch
Read this
By: Web Team

ஆஃப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேரை கொலை செய்த குற்றவாளிக்கு அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வய்து சிறுவனை வைத்து மரண தண்டனையை நிறைவேற்றியதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொலை செய்த குற்றவாளிக்கு ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்ட நிலையில் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனை வைத்து குற்றவாளியை துப்பாக்கியால் சுட வைத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved