Also Watch
Read this
By: Manigandan Raja

வங்கதேசத்தில் பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கவுள்ள, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க வங்கதேச தேசியவாத கட்சி திட்டமிட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தல் 209 இடங்களில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சி 20 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கிறது. இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் ஈசானுல் ஹோக் மிலன், யாருக்கும் மனவருத்தம் ஏற்படுத்த வேண்டிய எண்ணம் இல்லை என்றும், அனைவருக்கும் நாங்கள் நண்பர்தான் எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved