Also Watch
Read this
By: Web Team

இத்தாலியின் மிலானோ நகரத்தில் உள்ள மல்பென்சா விமான நிலையத்தில் (( Milano Malpensa Airport)) ஆயுதத்துடன் உள்ளே நுழைந்த மர்ம நபர், செக்-இன் பகுதிக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
டெர்மினல் 1 வழியாக உள்ளே வந்த அந்நபர், நேராக செக்-இன் பகுதிக்கு சென்று வாக்குவாதம் செய்ததுடன், திடீரென குப்பைத் தொட்டிக்கு தீ வைத்தார். இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய நிலையில், பாதுகாப்பு காவலர்கள் உடனே அந்நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved