Also Watch
Read this
By: Web Team

பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் அமெரிக்க வர்த்தகத்தை அனுமதித்தால், அதனை சார்ந்துள்ள இந்திய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க பால்வளத்துறைக்கு அதிகளவில் மானியம் அளிக்கப்படுவதால், இங்குள்ள சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்றும், சந்தைக்கு கூடுதல் வரத்தால், இந்தியாவில் பால் விலை 15 சதவீதம் வரை குறைந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என அறிக்கை கூறுகிறது.
விவசாயிகள் மட்டுமின்றி, பொருளாதாரத்தில் பால்வளத்துறையின் பங்களிப்பை பலவீனமடைய செய்யும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved