Also Watch
Read this
By: Web Team

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட 50 நாட்கள் அவகாசத்தை குறைக்க போவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதினின் நடவடிக்கைகளால் தாம் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக கூறியுள்ள அவர், இவ்விவகாரத்தில் என்ன நடக்க போகிறது என்பது தனக்கு முன்கூட்டியே தெரிவதாகவும் கூறினார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்க புதினுக்கு இன்னும் 10 அல்லது 12 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாகவும், அதற்குள் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.