Also Watch
Read this
By: Web Team

வடக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டரில் குறுகிய வீதியில் நடைபெற்ற நீர் சறுக்கல் விளையாட்டை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நோர்டே டி சாண்டாண்டரின் புகாராசிகாவில் உள்ள மக்களை மகிழ்விக்க குறுகலான வீதியில் இந்த நீர்சறுக்கு விளையாட்டு நடத்தப்பட்டது. இயற்கை வளங்கள் நிறைந்த மற்றும் வெனிசுலாவின் எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.
இதையடுத்து உலக நாடுகளுக்கு இப்பகுதியின் மீதுள்ள பிம்பத்தை மாற்றும் வகையிலும், உள்ளூர்வாசிகளை மகிழ்விக்கும் வகையிலும் இந்த விளையாட்டு நடத்தப்பட்டதாக அதன் மேயர் தெரிவித்தார்.