Also Watch
Read this
By: Web Team

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், அதேசமயம், தங்களது முக்கிய இலக்கை அடைவதில் உறுதியாக உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறியுள்ள ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுடனான பிரச்னையை அமைதியான முறையில் விரைவில் தீர்த்துக்கொள்ள விரும்புதாக அதிபர் புடின் பலமுறை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது நீண்டகால நடவடிக்கை எனவும், இதற்கு கடின முயற்சி தேவை எனவும் தெரிவித்துள்ள அவர், அது எளிதானதல்ல எனவும் கூறியுள்ளார். அதேசமயம், லட்சியத்தை அடைவதே தங்களுக்கு முக்கியமான விஷயம் எனவும், தங்களது லட்சியம் தெளிவாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved