மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதி கேண்டீனில் ”சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே உட்காரலாம்” என ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஐஐடியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி கேண்டீனில் ஒட்டப்பட்ட இந்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நோட்டீஸ் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் நோட்டீஸ் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி பேசுபொருளாகியுள்ளன.
இந்தியா
00 Comments
Leave a comment