மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையின் மலாட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சிக்கியிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குபின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
00 Comments
Leave a comment