வீட்டுமனை ஊழல் விவகாரத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வின் மீதான குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது. 2008 ஆம் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீனுக்கு தமிழ்நாடு அரசால் திருவான்மியூரில் ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக 2013 ஆம் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை 2019 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் அவர் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment