இந்தியா

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி நாள் | Prime Minister's

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா தாலடி நெற்பயிரை
காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ
அறிவிப்பு.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது...திருவாரூரில் வேளாண்மை துறை சார்பில் பிரதம மந்திரி பயிர்
காப்பீடு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில்
தெரிவித்ததற்கு இணங்க பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த
ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இப்க்கோ டோக்கியோ நிறுவனமானது ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு
எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை
வருவாயை நிலைப்படுத்தவும், மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை
ஊக்குவிக்கவும் திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்
கடந்த 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கு இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு
பிரீமியம் செலுத்த கடைசி நாளாக நவம்பர் 15 வரை அவகாசம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சம்பா நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு
529 ரூபாய் பிரிமியம் தொகையினை விவசாயிகள் செலுத்த வேண்டும். மேலும்
விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக ஈ அடங்கல் அல்லது அடங்கல்
படிவத்தை பெற்று விண்ணப்ப படிப்பும் முன்மொழிவு படிவம் ஆதார் கார்டு நகல்
மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை
கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள்
மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக
பதிவு செய்தாலோ பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட வழிகாட்டுதல் அடிப்படையில்
தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும். விவசாயிகள் இத்திட்டத்தின் பதிவு
செய்யும்போது விவசாயிகள் பெயர் வங்கிக் கணக்கு எண் சாகுபடி செய்த கிராமத்தின்
பெயர் பயிரின் பெயர் புல எண் மற்றும் சாகுபடி செய்த பரப்பு ஆகிய அனைத்து
தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள
அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத
விவசாயிகளும் பதிவு செய்யலாம் மேலும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு
பதிவு செய்ய வரும் விவசாயிகளின் அடங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான
முத்திரையிணை கண்டிப்பாக இடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள்
இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன் விரைவில் தங்களது பயிர்களை காப்பீடு செய்து
கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment