கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம்
மைசூர் தாலுகாவில் உள்ள அயரஹள்ளி கிராமத்தின் பண்ணையில் ஒரு கருஞ்சிறுத்தை
குட்டியும், மூன்று குட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மைசூர் தாலுகாவை சுற்றியுள்ள மக்கள் புலிகளால் பீதியடைந்துள்ள நிலையில்,
விவசாயி ஒருவரின் பண்ணையில் மூன்று சிறுத்தை குட்டிகள் காணப்பட்டுள்ளன. அந்த
கிராமத்தை சேர்ந்த தயவன் நாயக் என்ற விவசாயி கரும்பு வெட்டும் போது சிறுத்தை
குட்டிகளை பார்த்துள்ளார். உடனடியாக அவைகளை பாதுகாத்த தயவண்ண நாயக்,
வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் பிறந்த இந்த குட்டிகளை மீண்டும் தாயுடன்
சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புலி
நடமாடும் போது சிறுத்தை குட்டிகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்தது.
பிறந்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. இவை சிறிய குட்டிகள். எனவே குட்டிகளை
தாயுடன் சேர்க்கும் பணி தொடங்கினோம். இந்த நேரத்தில் தாயுடன் இருந்தால்
பாதுகாப்பாக இருக்கும் என டிசிஎஃப் பசவராஜ் தெரிவித்தார்.
இந்தியா
00 Comments
Leave a comment