Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு செல்லும் சாலையில் இரண்டு பெரிய கரடிகள் சாவகாசமாக சென்ற வீடியோ காட்சி வெளியாகி அங்குள்ள குடியிருப்பு வாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவு தேடி குடியிருப்புக்குள் நுழையும் கரடிகள் சர்வ சாதாரணமாக வலம் செல்வது தொடர் கதையாகியுள்ளது.
இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved