Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் இருந்து 21 சீர்வரிசை பொருட்களுடன் அழகருடைய வஸ்திரம் மேளதாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது.
கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் யானை வலம் வர, விருச்சிப் பூ மாலை, மஞ்சள், குங்குமம் மற்றும் மாங்கல்யம், அழகர்கோவில் தோசை, முறுக்கு, அப்பம் என 21 சீர்வரிசை பொருட்களை பணியாளர்கள் வாசல் வரை கொண்டு வந்தனர்.
பின்னர், சீர்வரிசை பொருட்கள் வாகனங்கள் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஆடி ஞாயிறு என்பதால் அழகர்கோவில் கூட்டம் அலைமோதியது.