Also Watch
Read this
By: Web Team

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கெஜலட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு மட்டும் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர்களை தலைமை ஆசிரியர் மருத்துமனையில் அனுமதித்தார்.சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.