Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (18), இவர் செல்லியம்பாளையம் பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்று உள்ளார் அப்போது மேச்சேரியை சேர்ந்த ரஞ்சித் குமார் காட்டுக்கோட்டையில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது.
எதிர்பாராத விதமாக சாலையை கடக்கும் முன்ற விஜய் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் அவ்வளியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரையும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் விஜய் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரஞ்சித் குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved