Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திரையரங்கு மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த சசிகலா விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற நபர் குறித்து போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் உள்ள PVR சினிமாஸ் திரையரங்கில் மேலாளராக பணியாற்றி வரும் சுதர்சன் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved