Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருமலைராசன் என்பவர் முருங்கைக்காய் ஏற்றிக்கொண்டு தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் காந்தி காய்கறி மார்க்கெட் முன்பு தனியார் பேருந்தை நிறுத்தி ஆட்களை இறக்கிவிட்டுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் பேருந்தின் பின்னால் மோதியதில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

மேலும் பேருந்தின் பின்னால் கண்ணாடி உடைந்து சிதறியதில் பேருந்தில் இருந்த இரண்டு பேர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர் காயங்களுடன் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி
வைத்து அம்பிளிக்கை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தனியார் பேருந்தின் பின்னால் மோதும் சரக்கு வாகனம் குறித்த சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.