Also Watch
Read this
By: Manigandan Raja

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஹள்ளி கிராமத்தில் சுரேஷ் என்ற நபருக்கு கிராவல் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு குத்தக்கை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரி உரிமத்தினை பயன்படுத்தி அருகாமையில் உள்ள நிலத்திலும் மற்றும் பலஜங்கமானஹள்ளி கிராம பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் அத்துமீறி கிரவல் மண் அள்ளப்படுகிறது.
அதுமட்டுமின்றி நாகர்கூடல் கிராமத்திலும் எந்த வித அனுமதியுமின்றி இரவு பகலாக கிரவல் மணல் அள்ளப்படுகிறது. அதேபோல் பென்னாகரம் அடுத்த அரகானஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலும் சடடத்திற்கு புறம்பான குவாரிகளால் சுற்றுசூழல் பாதிக்குள்ளாவது மட்டுமின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அருகாமையில் உள்ள நிலத்தினையும் குவாரி மாபியாகளிடமே விற்பனை செய்யவேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்.

இது குறியைத்து பொதுமக்கள் அளிக்கப்படும் புகார் மனுக்கள் அனைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாராத்தினை இழந்து வாடுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சி ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் சட்டத்திற்கு புறம்பான குவாரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தருமபுரி மாவடடாத்தில் மட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பான குவாரிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது மாவட்ட நிர்வாகதின் அலட்சிய போக்கே காரணம் எனவும்.
அதே போன்று அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக தொடர்ந்து அள்ளப்படும் குவாரிகள் உரிமைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரி மற்றும் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.