Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஆணையூர் கிராமத்தில் கடந்த 4 வருடங்களாக அரசு மதுபான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அன்றாடம் தாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், எனவே டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தியும், வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து, மனுக் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே ஆத்திரமடைந்த ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமி யாபுரம், காந்திநகர் மற்றும் முத்தரையர் நகரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து ஆனையூர் டாஸ்மார்க் கடையை த் திறக்க விடாமல் கடையின் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சமரசம் பேச வந்த டாஸ்மார்க் உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சர்ச்சைக்குரிய
டாஸ்மார்க் கடையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் மற்றும் தங்களுக்கு ஜாதகமான முடிவு எட்டப்படும் வரை காத்திருப்புப் போராட்டத்தை தொடரச் செய்து போராட்டம் நடத்தப்படும் இடத்தை விட்டுச்செல்ல மாட்டோம் என்ற உறுதியுடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உள்ளனர்.