Also Watch
Read this
By: Manigandan Raja

முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து நலம் விசாரித்தார். வலது தோள்பட்டை தசை பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்காக அவர் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
விலங்கியல் பூங்காவில் 3 நாகப்பாம்பு குட்டிகள் இனப்பெருக்கம்

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, செயற்கை அடைகாப்பான் மூலம் 3 மூக்குக்கண்ணாடி நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.
நாகப்பாம்பு முட்டைகள் ஒரு செயற்கை அடைகாக்கும் அறையில் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகள் பராமரிக்கப்பட்டுள்ளது. தற்போது குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.