Also Watch
Read this
By: Manigandan Raja

பிரியாணி கடையில் பிரியாணி வாங்கிவிட்டு அந்த டபரா மீது பிரியாணியை வைத்திருந்த நபரை எடுங்கள் நாங்கள் வியாபாரம் பார்க்க வேண்டும் என்று கடையின் உரிமையாளர் தெரிவிக்க வாக்குவாதம் முற்றி கைகலப்பில் சென்று முடிந்தது அங்கிருந்த கற்களை கொண்டு கடுமையாக இரு தரப்பும் தாக்கி கொண்டார்கள் .
ஒவ்வொருவரும் அவர்களுடைய நண்பர்களை வரவழைத்து பிரச்சனை தொடர்ந்து பெரிதாக சென்று கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு வந்த சிட்லபாக்கம் காவல்துறையினர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்கள் பிரச்சினையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

நாங்கள் பல்லாவரம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துவிட்டோம். அவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறுகிறார்கள்..
பிரச்சினையை தடுக்க வேண்டிய காவல்துறை எங்க லிமிட்டில் இது வராது அதன் காரணமாக நாங்கள் பல்லாவரம் போலீசாரிடம் தகவல் சொல்லி விட்டோம் என்று கூறி இரு தரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையிலும் அவர்களை தடுக்காமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த அவலம்.