Also Watch
Read this
By: Manigandan Raja

ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் உட்பட 7 கிராம பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம்
செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த ஏரி பொதுப்பாதையை தனிநபர் தற்போது ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் விவசாயம் செய்வதற்கு பாதையின்றி கிராம பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும் மேலும் 7 கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமித்து உள்ள நபரை மக்கள் கேள்வி கேட்க சென்றால் ஆபாச வார்த்தைகளால் ஒருமையில் பேசுவதும் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
எனவே பொது பாதையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தர வேண்டும் அதேபோல் ஆக்கிரமிப்பு செய்த நபரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து கிராம பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு பலமுறை அரசு அதிகாரிகளுக்கு எங்களுடைய பிரச்சனைகளை மனுவின் மூலமாக தெரிவித்தும் எந்த இதமான நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்மேல்குப்பம் கன்னிகாபுரம் செல்லும் சாலையில் கருப்புக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.