Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவர் சொந்த வேலை காரணமாக தனது இ பைக்கில் திருநெல்வேலி பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே இ பைக் வந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகைமூட்டம் எழத் தொடங்கியது.
உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கிய முருகன் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்ப்பதற்குள் பைக் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது சம்பவம் குறித்து பாளையங்கோட்டை
தீயனைப்பு துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர்.

அரை மணி நேரம் போராடி இருசக்கர வாகனத்தில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இருசக்கர வாகனத்தில் தீ பிடித்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved