Also Watch
Read this
By: Manigandan Raja

கோரிமேடு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையை முடித்துவிட்டு ஷட்டரை உட்புறமாக பூட்டி பணியாளர்கள் உள்ளே இருந்தபடி இருப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை டாஸ்மாக் கடைமீது அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வீசிவிட்டு அருகே இருந்த கடை மீதும் மற்றொரு பெற்றோர் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.

டாஸ்மார்க் கடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கெட்டின் மீது மோதியதில் பெட்ரோல் குண்டு வெளிப்புறமாக வெடித்து சிதறியது. இதில் கடை முன் வைக்கப்பட்டிருந்த சில மது பாட்டில்கள் மற்றும் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக டாஸ்மார்க் கடை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.