Also Watch
Read this
By: Web Team

கும்பகோணம் வலையபட்டி மாங்குடியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியானார். மாங்குடியை சேர்ந்த முத்துகுமரன் கும்பகோணம் நேரு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் சுவாமிமலை காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் அடித்து செல்லப்பட்ட நிலையில், முத்துகுமரனின் உடலை அவரது தம்பி கரைக்கு தூக்கி வந்தார்.