Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு மருத்துவர் வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுபிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவரான ராஜா என்பவர் தமது மகளின் படிப்பிற்காக விழுப்புரத்திற்கு தற்காலிகமாக சென்ற நிலையில், அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சுமார் 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved