Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் அன்னூர் மதுர காளியம்மன் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிகழ்வில் நடிகர் சிவக்குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
லக்கேபாளையம் பகுதியில் உள்ள இந்த கோயிலில் கடந்த 4ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 48 நாட்கள் மண்டல பூஜையில் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி, மகன் நடிகர் கார்த்தி ஆகியோர் வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.