Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 02:15 PM
By: Manigandan Raja

விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு :
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் கிராமத்தில் சுமார் என்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. எந்த ஏரியில் தென்னக ரயில்வே விரிவாக்கப் பணிக்காக
சாதாரண மண் அல்ல திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அக்ரோ போலீஸ் இன்ஃப்ரா அண்ட் செக்யூரிட்டி சொலுஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்த நிலையில்.
கடந்த ஒரு வார காலமாக மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்துக்குள்ளாகவே கனிமவளத்துறை அதிகாரிகள் அறிவித்த மூன்று அடி ஆழத்தை காட்டிலும் சுமார் 10 அடிக்கும் மேலாக மண் அல்லப்பட்டு வருகிறது. அதேபோல் தென்னக ரயில்வே பணிகளுக்காக கொண்டு செல்ல வேண்டிய மண் வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஏரியில் சேமிப்பில் இருந்த பல லட்சம் லிட்டர் சேமிப்பு நீர் ராட்சத இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 10 அடி ஆழத்தை தாண்டிலும் கனிம வளம் சுரண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது அதேபோல் கால்நடை வளர்ப்பும் கேள்விக்குறியாகும். குறிப்பாக மத்திய அரசின் தென்னக ரயில்வே பணிக்காக தொடங்கப்பட்ட இந்த
மண்ணள்ளும் பணிகள் தனியாருக்கு அதிக விற்பனை செய்யும் நோக்கில் செயல்பட்டு வருவதால் உடனடியாக இந்த பாரிப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
அதேபோல் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படக்கூடிய இந்த ஏரியில் கனிமவளக் கொள்ளையால் விவசாயமும் கேள்விக்குறியாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved