Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 02:27 PM
By: Manigandan Raja

இளைஞரிடம் விசாரணை :
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த காந்தல் பகுதியில் வசித்து வருபவர் ரிச்சர்ட் இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 14 வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் மேல் உள்ள வழக்குகள் குறித்தும் அதை முடிப்பது குறித்தும் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை காவல்துறையினர் இவர் வீட்டுக்கு சென்று காவல் நிலையத்திற்கு அழைப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு இருந்த வழக்குகள் அனைத்தும் முடிவடை நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் தன்னை டார்ச்சர் செய்வதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயன்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved