Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மசிகம் பகுதியை சேர்ந்த வேண்டாமணி என்ற பெண் சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார்.
இந்நிலையில் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஸ்ட்ரெச்சரில் வைத்து அரை மணி நேரமாக நுழைவாயிலில் காத்திருந்தும் மருத்துவர்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காயமடைந்த பெண் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved