Also Watch
Read this
By: Manigandan Raja

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சி உட்பட்ட 48 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.தங்கள்
பகுதி பல்வேறு கோரிக்கைகளை குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர்.
இந்த நிலையில் ஆவடி ஹவுசிங் போர்டு பகுதியில் மூடப்பட்ட நிலையில் இருந்த அம்மா மண்டபத்தை நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கு ஆதரவாக திமுக
கவுன்சிலர்கள் முதல்வர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அம்மா மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், மாற்று இடத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு
அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து மண்டல தலைவர் ராஜேந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது. எனினும் அமளி இடையே திமுக கவுன்சிலர்கள் மேயர் உதவியுடன் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் வெளிநடப்பு செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved