Also Watch
Read this
By: Web Team

ஆக்கிரமிக்கப்பட்ட தனது 11 செண்ட் நிலத்தை மீட்டு தரக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்தார்.
சோகண்டி கிராமத்தை சேர்ந்த கலாவதி என்ற இந்த மூதாட்டியின் தாயாரின் பெயரில் இருக்கும் நிலத்தை ஞானசேகரன், சம்பத் ஆகிய இருவர் ஆக்கிமித்து இருப்பதாக கூறப்படுகிறது. ]
ஆக்கிரமித்தவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கலாவதி குற்றம் சாட்டினார்.