news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தடுப்புச்சுவரை உடைத்து 200 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்
tv

Also Watch

tv

Read this

தடுப்புச்சுவரை உடைத்து 200 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்

கோவை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
incident

ஆழியார் வால்பாறை சாலை மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே, தடுப்புச் சுவரை உடைத்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியை பாலசுப்ரமணியம் ஓட்டிச் சென்றுள்ளார். வால்பாறையில் உள்ள கடையில் இறக்கிவிட்டு அதிகாலை 2 மணி அளவில் பொள்ளாச்சி நோக்கி மலைப்பாதையில் வரும்போது, மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி உடைத்துக் கொண்டு, சுமார் 200 அடி மலைப்பாதை வழியாக வந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையின் குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது.
விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், அவ்வழியாக வந்த லாரியில் கயிறு கட்டி ஈச்சர் வாகனத்தை இழுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் மலைப்பாதையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த பாலசுப்ரமணியம், எவ்வித காயங்கள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
1 hr 1 min agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved