Also Watch
Read this
By: Web Team

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் நீதிமன்ற உத்தரவின்படி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கோயில் தேர் சென்று வர வசதியாக உள்ளதா? என சட்டப்பணிகள் ஆணையக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
வேப்பந்தட்டையில் நடைபெறும் கோயில் தேரோட்டம் தங்கள் பகுதிக்கும் வரவேண்டும் என பட்டியலின சமூகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து, பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் தேர் சென்று வர முடியுமா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்டப்பணிகள் ஆணையக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.