Also Watch
Read this
By: Fyrose Banu

கோத்தகிரியில் மின் இணைப்பு வழங்க மறுத்த மின் பகிர்மான அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மின் பகிர்மான அலுவலகம் முன்பு தர்ணா
கோத்தகிரி ரைபில் ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் கிருத்திகா தம்பதி. இவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கோவையில் வசித்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான கோத்தகிரி ரைபில் ரேன்ச் பகுதியில் உள்ள தனத வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தனர். 
மின் இணைப்பு வழங்காமல் அலைகழித்த அதிகாரிகள்
கடந்த 10 வருட காலமாக தற்போது வரை அரசுக்கு செலுத்த வேண்டிய வரிவகைகளை முறையாக கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது மின் இணைப்பு தர முடியாது என கூறியதால் மாவட்ட மின் பகிர்மான அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும் மின் இணைப்பு தராமல் ரமேஷ், கிருத்திகா இருவரையும் பல்வேறு காரணங்களை கூறி பலமுறை அலைகழித்ததாக கூறப்படுகிறது. 
மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ரமேஷ் அவரது மனைவி கிருத்திகா இருவரும் கோத்தகிரி மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணாவில் அமர்ந்து கண்டனம் தெரிவித்தனர். மின் இணைப்பு வேண்டி 15 நாளில் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அரசு உத்தரவுக்கு முரணாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கப்பட்ட இந்த சம்பவத்தால் கோத்தகிரி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved