Also Watch
Read this
By: Web Team

தளவாய்புரத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி உள்ளிட்ட நான்கு பேர், வோல்ஸ்வேகன் வெண்டோ காரில் புண்ணியவாளன் புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில், சுமார் 20 அடி தூரத்திற்கு காற்றாடி போல் சுற்றியபடி பறந்து சென்று தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த இருவர் விபத்தில் படுகாயம் அடைந்தனர்.