Also Watch
Read this
By: Web Team

தருமபுரி அருகே, சாக்லேட் வாங்கிக் கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடிவந்த சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதியதன் சிசிடிவி காட்சி வெளியானது.
பாப்பாரப்பட்டி அடுத்த மந்தகொட்டாய் பகுதியை சேர்ந்த சேட்டு- மஞ்சு தம்பதியின் 4 வயதான மகன் கீர்த்திசரண், கடையில் சாக்லேட் வாங்கி கொண்டு வெளியே ஓடிவந்து சாலையை கடக்க முயன்றபோது, பைக் மோதி தூக்கி வீசப்பட்டான். அதில், பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த பெண்ணும் கீழே விழுந்தார்.
விபத்தில் சிறுவனுக்கு காலில் அடிபட்டு மாவு கட்டு போடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved