Also Watch
Read this
By: Manigandan Raja

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தகவல் :
மேற்கு வங்கத்தில் விரைவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர உள்ளதாக பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு தினத்தையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக கூறினார்.
மால்புவா தராததால் 43 குடும்பங்கள் சமூகப் புறக்கணிப்பு :
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில், இறுதிச்சடங்கு விருந்தில் "நெய் மால்புவா" வைக்காததால் 43 குடும்பங்கள் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. மண்ட்வாரியா கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் நடந்த இறுதிச்சடங்கில், வசதிக்குறைவு காரணமாகப் பாரம்பரிய இனிப்பான "நெய் மால்புவா-வை" பரிமாறாமல் சாதாரண உணவே பரிமாறப்பட்டுள்ளது.
இந்திய அணுசக்தி துறையில் புதிய மைல்கல் :

இந்தியாவின் தூய ஆற்றல் மற்றும் மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கல்பாக்கத்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில், வேக இனப்பெருக்க சோதனை அணு உலை வழங்கும் அணு வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் சுழற்சி முறையிலான உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தைத் அணுசக்தி துறை தொடங்கி வைத்துள்ளது.