Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை வாங்கியதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்துவதாக கூறி, சோழமண்டலம் நிதிநிறுவன அலுவலகத்திற்கு பூட்டு போட்டு வாடிக்கையாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் சோழமண்டலம் நிதி நிறுவனம் பறிமுதல் செய்த சரக்கு வாகனத்தை ஆறு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில், வாகனத்திற்கான என்ஓசி சான்றிதழை நிதிநிறுவனம் வழங்குவதில் தொடர்ந்து காலம்தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved