Also Watch
Read this
Posted on: Feb 24, 2026 09:41 AM
By: Manigandan Raja

குடிநீருக்காக ஓடும் பொதுமக்கள் :
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள இழந்த குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னார் பாளையம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் அருகில் இருக்கும் விவசாயிகள் உடைய காடுகளுக்கு சென்று பொதுமக்கள் வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர்களை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் எலந்தகுட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறிய அளவிலான டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது அதுவும் இரண்டு நிமிடம் தண்ணீரை குடித்து விட்டு அதிவேகமாக தண்ணீர் வண்டி புறப்படும் பொழுது மக்கள் பின்னாடி ஓடிவரும் காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved