Also Watch
Read this
By: Manigandan Raja

குடிநீர் முறையாக வரவில்லை என புகார் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலை அடுக்கம் பஞ்சாயத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் இந்த பகுதியில் முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு வத்தலகுண்டு கொடைக்கானல் பிரதான சாலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டு வருவதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டு
வருகிறது.
மேலும் அடுக்கம் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகம் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் எங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்கவில்லை என்றால் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து ஈடுபடுவோம் என்று கூறுகின்றனர் சம்பவத்தை அறிந்த சம்பவத்தை அறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் தற்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.