Also Watch
Read this
By: Admin News Tamil

பூஜை செய்வது என்பது தொடர்பாக தகராறு :
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பூசாரியாக முத்துக்குமார் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார்.
இக்கோவிலில் பூஜை செய்வதற்காக தங்களுக்கும் உரிமை உள்ளதாக பூசாரி முத்துக்குமாரின் பங்காளிகள் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முறையிட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற கொண்டிருக்கும் போது பக்தர்கள் முன்னிலையில் முத்துக்குமாரை அவரது பங்காளிகள் தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி நிலையில் இளையான்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில் சன்னதியில் பூசாரி தாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.